Friday, March 9, 2007

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ
ஒப்பும்படி

எழுத்திலும் அதிரும்
என் பறையொலி
நாராசமாய்
உன்
செவியில் இறங்குதல் போல்

உன்
மெளனவரியும்
அருவருக்க ஊரும்
என்
கண்ணிலூம் மனசிலும்
ஒரு
கம்பளிப் புழுவாய்

என்
கவிதை முளைவிடும்
மனுசங்க வெளியை
உன்
கால்விரல் நகமும்
தீண்டாதது போலவே

மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில் கூட
நீளவே நீளாது
என் மயிரின்
நிழலும்

2 comments:

ஈழக்கதிரவன் said...

http://eezhakkathiravann.blogspot.com/

மிகவும் சிறப்பான தளம்.
இந்தத் தளத்துக்கும் http://eezhakkathiravann.blogspot.com/
சென்று பாருங்கள் உங்கள் கருத்தை பகிருங்கள்.
மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நேசமுடன்
சு.பா.ஈஸ்வரதாசன்.

Ravindran Arunachalam said...

தோழரே பீட்டர் சாலை பெரிய சாலை என்ற உங்கள் கவிதையை படிக்க விரும்புகிறேன். எங்கே கிடைக்கும்? அல்லது உங்கள் வலைப்பூவில் வெளியிடுவீர்களா?