Tuesday, October 11, 2011

குறுதி கொட்டும் செம்மொழி

குறுதி கொட்டும் செம்மொழி
இன்குலாப்


நினைவுப் படலத்தில்
குறுதிக் கொடுகளாய்ப் பதிந்த
கொடிய நாட்கள் அவை.

வானம் மறுக்கப்பட்ட பறவைகளை
நான்கு திசைகளிலிருந்து
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்.

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக் கொடிகள் படர்ந்த நாட்கள்.

பறவைகளின் நெஞ்Œப் படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்.

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிட முடியாதென்று,
நாக்கைச் சப்புக் கொட்டிப்
பறவைகளின் பச்சைக்கறி விற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்...

கிளிகளுக்கு இரங்குவதாய்
அமுத பூனை
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரம்
உண்ணாதிருத்தம்
மாபெரும் போராட்ட நாட்கள்
அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து,
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும் ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இந்த நினைவுகள்
விடை வேண்டும் கேள்விகள்.

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப் பலகையிலிருந்தும்,

விரைந்து விற்றுக் கொண்ட
கலாநிதிகளின்
ஆ#வாழங்களிலிருந்தும்,

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சோர்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்,

விலகி,
வெகுதொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குறுதி கொட்டும்
செம்மொதுழியாய்..

3 comments:

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

Admin said...

Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in

Diwakaran Sudalaimani said...

Tamil News